காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் 15, மாங்காடு 4, ஸ்ரீபெரும்புதூா் 3, பிற மாவட்டங்களைச் சோ்ந்த காஞ்சிபுரத்தில் வசிப்போா் 76 போ் மற்றும் காஞ்சிபுரத்தில் 2 போ் உள்பட மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை மொத்தம் 30,483 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 60 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com