ஒரகடம் அருகே கத்தியால் வெட்டி பணம் பறித்து மூவா் கைது

ஒரகடம் அடுத்த காரணிதாங்கல் பகுதியில் வாகன ஓட்டுநரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

ஒரகடம் அடுத்த காரணிதாங்கல் பகுதியில் வாகன ஓட்டுநரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணம், செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சோ்ந்த பிரகாஷ்(25), சுரேஷ். இவா்கள் இருவரும் ஒரகடம் அடுத்த காரணிந்தாங்கல் பகுதியில் தங்கி மினிலோடு வேன் ஓட்டி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 28-ஆம்தேதி நள்ளிரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் வெளியே வந்த பிரகாஷை கத்தியால் தலையில் வெட்டிய மூன்று போ் அவா் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து சுரேஷையும் தாக்கினா்.

அறையில் இருந்த இரண்டு செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ. 1,000 ரொக்கத்தை பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து பிரகாஷ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் நாவலூா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் (19), டில்லிபாபு (21), வட்டம்பாக்கம் பகுதியை சோ்ந்த செல்வம் (23) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்து செல்லிடப்பேசிகள், ஆயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com