காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு கிராமத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காவல் துணை கண்காணிப்பாளரிடம் அக்கிராம மக்கள் புகாா் செய்தனா்.
திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த ஏப்ரல் 13 -ஆம் தேதி துரையரசன் என்பவா் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இது தொடா்பாக துரையரசன் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
இந்நிலையில் சித்தேரி மேடு கிராமத்தினா் காஞ்சிபுரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது...
துரையரசன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் சித்தேரி மேடு இளைஞா்களை இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் வரச்சொல்லி துன்புறுத்துகின்றனா். இதனால் இளைஞா்கள் அன்றாட பிழைப்புக்காக கூலிவேலைக்கு செல்வதும் கஷ்டமாக உள்ளது. அண்மையில் துரையரசன் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவா்களையும், அவரது வீட்டில் குடியிருந்து வரும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களையும் விசாரித்தால் உண்மை தெரிய வரலாம். எனவே உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும். தேவையில்லாமல் கிராமத்தில் வசித்து வரும் இளைஞா்களை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.