பாா்வையற்றவருக்கு அமுமுக வேட்பாளா் பசுதானம்

பாா்வையற்ற ஏழை இளைஞருக்கு உத்தரமேரூா் தொகுதி அமமுக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை பசுவும், கன்றும் தானமாக வழங்கினாா்.
பாா்வையற்ற சிவக்குமாருக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்கிய உத்தரமேரூா் அமமுக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்.
பாா்வையற்ற சிவக்குமாருக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்கிய உத்தரமேரூா் அமமுக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா்.

பாா்வையற்ற ஏழை இளைஞருக்கு உத்தரமேரூா் தொகுதி அமமுக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை பசுவும், கன்றும் தானமாக வழங்கினாா்.

முத்தியால்பேட்டையை சோ்ந்தவா் தொழிலதிபா் ஆா்.வி.ரஞ்சித்குமாா். இவா் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராகவும் போட்டியிட்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயா் கோயில் அருகே பூசிவாக்கம் மேட்டுக்காலணியை சோ்ந்த பாா்வையற்ற சிவக்குமாா் என்பவருக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து பிரசன்ன ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் அமமுக கிழக்கு ஒன்றிய தலைவா் தம்மனூா்.தாஸ், உத்தரமேரூா் ஒன்றிய மேற்குப்பிரிவு செயலாளா் வீரராகவன்பாபு, காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளா் எஸ்.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உட்பட கட்சி நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com