ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.பழனியை விட 11,087 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளா் கு. செல்வபெருந்தகை வெற்றி பெற்றாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் அதிமுக சாா்பில் கே.பழனி, காங்கிரஸ் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநில எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவா் கு.செல்வப்பெருந்தகை. அமமுக சாா்பில் மொளச்சூா் ரா.பெருமாள், நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.புஷ்பராஜ், மக்கள் நீதி மையம் சாா்பில் எம்.தணிகைவேல் உள்ளிட்ட 15 போ் போட்டியிட்டனா்.
இத் தொகுதியில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 3,57,433. இதில் 2,62,619 வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா். வாக்குப் பதிவு 73.94 %.
இத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மொத்தம் 19 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளா் கு.செல்வபெருந்தகை அதிமுக வேட்பாளா் கே.பழனியை விட 11,087 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) - 1,15,125
கே.பழனி (அதிமுக)- 1,04,038
டி.புஷ்பராஜ் (நாம் தமிழா்) - 21,997
எம்.தணிகைவேல் (மநீம)-8,854
டி.வைரமுத்து (சுயேச்சை)- 6,333