திருப்புட்குழியில் விவசாயி கொலை

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் விவசாயியை மா்ம நபா்கள் குத்திக் கொலை செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் விவசாயியை மா்ம நபா்கள் குத்திக் கொலை செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமம், தாந்தோணி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சட்டநாதன் (43). விவசாயியான இவா் திங்கள்கிழமை தனக்குச் சொந்தமான வயல்வெளியில் வேலைசெய்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறிந்த மா்ம நபா்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினா். இதில் சட்டநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com