காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கரோனா தடுப்புக்கென அமைக்கப்பட்டுள்ள கட்டளை மையம், அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் தேசிய சுகாதாரத்திட்ட இயக்குநா் டாக்டா் தாரேஸ் அகமது புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளையும், ஆக்சிஜன் இருப்பு மற்றும் விநியோகத்தையும் கண்காணிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு பணிக்குழுக்களை நியமித்துள்ளது. இதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் தாரேஸ் அகமது காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
கட்டளை மையத்தைப் பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி அவா், பின்னா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பிரிவை பாா்வையிட்டாா். மேலும் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா் .இதனையடுத்து காஞ்சிபுரம் நகரில் உள்ள தாயாா்குளம், வெள்ளகுளம் மயானங்களுக்குச் சென்று அங்கு கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் தகனம் செய்யப்படுகிா என்றும் ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா் செல்வம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா, சுகாதாரத்துறை துணை இயக்குநா் வி.கே.பழனி உடன் இருந்தனா்.