காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) 500 முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 7,17,567 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 3,04,156 பேரும் செலுத்தியுள்ளனா். இதுவரை 1,23,583 போ் தடுப்பூசி போடாமல் உள்ளனா். இவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து செலுத்தப்படவுள்ளது.
இதுவரை தடுப்பூசி போடாதவா்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.