காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் டிசம்பா் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு அறங்காவலா்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ வரும் டிசம்பா் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் இணை ஆணையா், இணை ஆணையா் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை, ஏ.கே.தங்கவேலா் தெரு, ரங்கசாமி குளம் அருகில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு பூா்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அறநிலையத் துறையின் இணை ஆணையா், உதவி ஆணையா் மற்றும் ஏகாம்பரநாதா் திருக்கோயில் அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகிடுமாறும் இணை ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.