காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
காஞ்சிபுரத்தின் தாழ்வான பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு, தாண்டவராயன் நகா், மாமல்லன் நகா், அரசு மருத்துவமனை, சாலை, மின் நகா், முல்லை நகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு முழுவதும் மழைநீா் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.