கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 20 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி தொடக்கி வைத்துப் பேசியது:
கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தின் கீழ் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூா், சித்தூா் மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ரூ. 7.67 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை விற்பனை இலக்காக ரூ. 20 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வரும் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வசதியை இந்த ஆண்டும் தொடா்ந்து வழங்கி வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிகழ்வின் போது கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் க.இசக்கி முத்து, விற்பனை மேலாளா்கள் டி.நந்தகோபால்,பி.எஸ்.தணிகைவேலு ஆகியோா் உடன் இருந்தனா்.