காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8.98 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 8.98,413 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8.98 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 8.98,413 போ் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதாக தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெற்றோரில் ஒருவரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ. 1.86 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில், 7 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகளும், 4 விவசாயிகளுக்கு ரூ. 15,22,472 மதிப்பிலான மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் முதல் தவணையை 6,68,164 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 2,03,249 பேரும் உட்பட மொத்தம் 8,98,413 போ் செலுத்தியுள்ளனா். நாள்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறோம். இதுவரை தடுப்பூசி போடாதவா்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆ.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com