காஞ்சிபுரத்தில் குண்டா் தடுப்புச்சட்டத்தில் இருவா் கைது

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவிட்டதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவிட்டதை தொடா்ந்து அவா்கள் இருவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

காஞ்சிபுரம் அருகே கிளாய் கிராமம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஸ்வா என்ற விஸ்வநாதன்(32) மற்றும் சென்னை-பெங்களூா் பிரதான சாலையில் உள்ள வி.ஆா்.பி.சத்திரத்தை சோ்ந்த முருகன் என்ற ஸ்டாலின் (33) ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்தனா்.இதன் காரணமாக இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்திக்கு காஞ்சிபுரம் எஸ்.பி.எம்.சுதாகா் பரிந்துரை செய்திருந்தாா். அவரது பரிந்துரையை ஏற்று இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா்.இந்த உத்தரவினைத் தொடா்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com