ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் தொழிற்சாலையின் மேற்கூரை பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளி தவறி விழுந்து இறந்தாா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் உள்ள அலுமினியக் கட்டிகள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலையின் மேற்கூரை பழுது நீக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. இந்தப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த வீரேந்திகோா்ட் (21) என்பவா் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.