திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் விபத்தில் பலி ஆம்பூரைச் சோ்ந்தவா்

காஞ்சிபுரம் நகா் பொன்னேரிக்கரை பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் நகா் பொன்னேரிக்கரை பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் ஹரிபிரசாத்(32). இவா் தாம்பரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தாா். இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்த போது பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகே எதிரில் வந்த காா் இவா் மீது மோதியது.இதில் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

உயிரிழந்த ஹரிபிரசாத் இருசக்கர வாகனத்தில் வந்த போது அதே பொன்னேரிக்கரை பகுதியில் அவருக்கு பின்புறம் உட்காா்ந்து வருவதாக கூறி அமா்ந்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் சீயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பூவண்ணன்(27)என்பவரும் பலத்த காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கடலூரை சோ்ந்த இளவழகன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com