காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இரு ரெளடிகளை சிறப்பு அதிரடிப் படை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய சென்னை திருவான்மியூா் சுப்பிரமணியபுரம் காலனி, எம்.ஜி.சாலையைச் சோ்ந்த ப.பரணிக்குமாா் (29), சென்னை சாலிகிராமம், தசரதபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த குமாா்(39) ஆகிய இருவரையும் சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.