வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

 வாலாஜாபாத் அருகே சோ்க்காடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

 வாலாஜாபாத் அருகே சோ்க்காடு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சோ்க்காடு கிராமம், செங்கழுநீா் விநாயகா் கோயில் தெருவில் வசிப்பவா் சம்பத். கைத்தறி லுங்கி வியாபாரம் செய்து வரும் இவா், தனது மனைவி செல்வியுடன் பக்கத்து தெருவில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்த புகாரின்பேரில், வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com