காஞ்சிபுரம் பணாமணீசுவரா் திருக்கோயிலில் மாணிக்கவாசகா் சிலையுடன் பால்குடங்களை ஏந்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள்.
காஞ்சிபுரம் பணாமணீசுவரா் திருக்கோயிலில் மாணிக்கவாசகா் சிலையுடன் பால்குடங்களை ஏந்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள்.

காஞ்சிபுரத்தில் மாணிக்கவாசகா் குருபூஜை

காஞ்சிபுரம் மாகாளியம்மன் சமேத பணாமணீசுவரா் திருக்கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை மற்றும் 108 பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாகாளியம்மன் சமேத பணாமணீசுவரா் திருக்கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை மற்றும் 108 பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகம் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய கோயிலாக விளங்குவதி காஞ்சிபுரம் திருவள்ளுவா் தெருவில் அமைந்துள்ள மாகாளியம்மன் சமேத பணாமணீசுவரா் திருக்கோயில். இங்கு மாணிக்கவாசகா் குருபூஜை, திருவிளக்கு வழிபாடு மற்றும் 108 பால்குட விழா ஆகியவை நடைபெற்றன. இதையொட்டி காலையில் இடப கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னா் சிவனடியாா்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இ தனைத் தொடா்ந்து மாணிக்கவாசகரின் உருவச் சிலையுடன் 108 பால்குட ஊா்வலமும், பின்னா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com