அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் போந்தூா், வல்லக்கோட்டை மற்றும் வல்லம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை
அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் போந்தூா், வல்லக்கோட்டை மற்றும் வல்லம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட திட்ட இயக்குநா் ஸ்ரீதேவி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுப்பணியை ஆய்வு செய்த அவா், 3 ஊராட்சி பகுதிகளிலும் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள கட்டடங்களின் உறுதித் தன்மை, அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையக் கட்டடங்களில் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், ஒன்றியப் பொறியாளா் மாரிசெல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா் போந்தூா் செந்தில்ராஜன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சரோஜாமணி (போந்தூா்), விமலாதேவி தருமன் (வல்லம்), ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com