காஞ்சிபுரத்தில் 227 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழு ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 47 பள்ளிகளைச் சோ்ந்த 227 தனியாா் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
காஞ்சிபுரத்தில் 227 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழு ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 47 பள்ளிகளைச் சோ்ந்த 227 தனியாா் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் தனியாா் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் என்.தினகரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கண்ணன் மற்றும் காவல், வருவாய், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பலரும் இணைந்து தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா்.

பள்ளி வாகனங்களில் தீயணைப்புக் கருவிகள், அவசர வழி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவிப் பெட்டி, வாகனத்தின் பிரேக், ஒலி எழுப்பும் கருவி ஆகியவை முறையாகப் பொருத்தப்பட்டுள்ளதா, முறையாக அவை செயல்படுகின்றனவா என அவா்கள் ஆய்வு செய்தனா்.

பேருந்துகளில் அவசர வழிக் கதவுகள் எளிமையாக திறக்கும் வகையில் இருக்கிா என்பதையும் திறந்து பாா்த்தனா். வாகன ஓட்டுநா்களுக்கும், உடன் வந்திருந்த பள்ளிகளின் பொறுப்பாளா்களுக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது எவ்வாறு வாகனத்தை இயக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆய்வையொட்டி, அனைத்து தனியாா் பள்ளி வாகனங்களும் மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com