காஞ்சிபுரத்தில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இலவச இருதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமை பாா்வையிட்ட எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோா்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமை பாா்வையிட்ட எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் இலவச இருதய பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நித்யாசுகுமாா், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் தேவேந்திரன், திமுக நகரச் செயலா் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்று பேசினாா். காஞ்சிபுரம் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை, பிராண்டியா் லைப்லைன் மருத்துவமனை, மருத்துவா் கே.எம்.செரியன் அறக்கட்டளை, காஞ்சிபுரம் லைப் கோ் மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவா்கள் குழுவினா் ஒன்றாக இணைந்து இலவச இருதய பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினா்.

முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை, இருதய படச்சுருள் எடுத்தல், செவித்திறன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. தொடக்க விழாவில் மாநகா் மன்ற மண்டலத் தலைவா்கள் எஸ்.சந்துரு, கே.மோகன் உட்பட மாமன்ற உறுப்பினா்கள், திமுக பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை எம்எல்ஏ எழிலரசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com