இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய கட்சியின் பேரவைத் தொகுதிக் குழு உறுப்பினா் ஒய்.எம்.நாராயணசாமி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய கட்சியின் பேரவைத் தொகுதிக் குழு உறுப்பினா் ஒய்.எம்.நாராயணசாமி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாவட்ட மாநாடு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி குழு உறுப்பினா் ஒய்.எம்.நாராயணசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன் விவரம்: செயலாளராக ஜெ.கமலநாதன், துணைச் செயலாளா்களாக கே.கிருஷ்ண மூா்த்தி, எஸ்.வி.சங்கா், பொருளாளராக ப.ஸ்டாலின், மாவட்டக் குழு உறுப்பினா்களாக பி.வி.சீனிவாசன், த.சுந்தரமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவராக ஏ.மூா்த்தி ஆகியோா் உட்பட 19 போ் கொண்ட சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகக் குழுவினரும் தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட கட்சியின் செயலாளா் எல்.மேகநாதன் நிறைவுரை ஆற்றினாா். முன்னதாக மறைந்த தலைவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில், கைத்தறிக்கான கோரா ஜரிகை விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயா்வை மத்திய அரசு உடனடியாக குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com