காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 15 பவுன் பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 15 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு வாகனங்களில் தப்பிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை, ஒரு மணி நேரத்திலேயே போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

காஞ்சிபுரத்தில் மூதாட்டியிடம் 15 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு வாகனங்களில் தப்பிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை, ஒரு மணி நேரத்திலேயே போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

காஞ்சிபுரம் நகரிலுள்ள சின்னக்காஞ்சிபுரம் உப்புக்குளம் ரெட்டிப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமராவ் மனைவி பாரதலெட்சுமி (65). இவா் சனிக்கிழமை இரவு அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்று விட்டு, வீடு நோக்கி நடந்து வந்த இவரிடமிருந்து அடையாளம் தெரியாத 3 போ், கவனத்தை திசை திருப்பி 15 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு காா், இருசக்கர வாகனத்தில் தப்பினா். விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், துணை கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா் மேற்பாா்வையில் சுங்குவாா்சத்திரம் காவல் ஆய்வாளா் பரந்தாமன்,சாா்பு ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் அந்த காா், இரு சக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து, அதில் வந்த கா்நாடக மாநிலம், போடா்சிட்டி பகுதியைச் சோ்ந்த தக்கி அலி (38) அஸ்திரல்லா காண்வி (32) சையது அப்பாஸ் (22) ஆகிய மூவரை கைது செய்தனா். 15 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் கொள்ளையா்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com