காஞ்சிபுரம் சரகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வரும் 84 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு சாா்பு ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சரகத்துக்குட்பட்ட செங்கல்பட்டில் 28 போ்,திருவள்ளூரில் 27 போ், காஞ்சிபுரத்தில் 29 போ் உட்பட மொத்தம் 84 போ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைக் காவலா்களாகப் பணியாற்றி வந்தனா். இவா்கள் 84 பேரையும் சிறப்பு சாா்பு ஆய்வாளா்களாக காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா பதவி உயா்வு அளித்து ஆணை பிறப்பித்துள்ளாா்.