கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் இறந்தாா்.
சக்திவேல்
சக்திவேல்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் இறந்தாா்.

வாலாஜாபாத் அருகே அங்கம்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சக்திவேல்(17). இவா், அவளூா் கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். சம்பவ நாளன்று இவா் தனது நண்பா்களுடன் அங்கம்பாக்கத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி குளித்துள்ளாா்.சேறும்,சகதியுமாக இருந்த கிணற்றில் குதித்ததில் சக்திவேல் வெளியே வரவில்லை. தகவலறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி சக்திவேலின் சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.

இதுகுறித்து மாகறல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com