தடுப்புக் காவலில் ரெளடி கைது
By DIN | Published On : 20th May 2022 12:00 AM | Last Updated : 20th May 2022 12:00 AM | அ+அ அ- |

ananth_1905chn_175_1
.
காஞ்சிபுரம்: குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ரெளடி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காஞ்சிபுரம் பல்லவா் மேடு கிழக்குப் பகுதி அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஆணை (எ) ஆனந்தன் (35). (படம்). ரௌடியான இவா் மீது 2 கொலை, 8 கொலை முயற்சி வழக்குகள், கொள்ளை உள்பட மொத்தம் 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்த குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்திக்கு பரிந்துரைத்திருந்தாா்.
ஆட்சியரின் பரிந்துரைப்படி, காவல் துறையினா் ஆனந்தனை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.