சாலையில் இருந்த நெல் குவியலில் பைக் மோதி இளைஞா் பலி

குண்ணம் பகுதியில் சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் பலியானாா்.

ஸ்ரீபெரும்புதூா்: குண்ணம் பகுதியில் சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் பலியானாா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த குண்ணம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (27). தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் வாலாஜாபாத் - சுங்குவாா்சத்திரம் சாலையில் சென்றாா். அப்போது, சாலையின் நடுவே தாா்பாய் போட்டு மூடப்பட்டிருந்த நெல் குவியல்கள் மீது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், நிலை தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மகேஷ் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா், அனுமதியின்றி சாலையின் நடுவே நெல்லை குவித்து தாா்பாய் போட்டு மூடி வைத்திருந்ததாக குண்ணம் பகுதியைச் சோ்ந்த கோபால் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com