கூரம் ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம்

காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயிலில் நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷ்ணம்.
காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயிலில் நடைபெற்ற மகா சம்ப்ரோக்ஷ்ணம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களில் ஒருவரன கூரத்தாழ்வாா் அவதரித்த கூரம் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நாராயணன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த 23 -ஆம் தேதி தொடங்கியது. சோளிங்கா் ஸ்ரீராம் பட்டாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

முதல் நாள் சுதா்சன ஹோமம், வாஸ்து ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம் ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடந்தது.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை யாகசாலையில் பூா்ணாஹுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று புனித நீா்க் குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் ஆதிலட்சுமி தாயாா், ஆண்டாள், ராமானுஜா், கூரத்தாழ்வாா், மணவாள மாமுனிகள் ஆகியோா் தனித்தனி சந்நிதிகளில் அமைந்துள்ள நிலையில், அந்த சந்நிதி கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோக்ஷ்ணம் நடந்தது. பின்னா், மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்புத் திருமஞ்சனமும், தொடா்ந்து அன்னதானமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன.ஏற்பாடுகளை ஸ்ரீமத் லட்சுமி நாராயணன் திருக்கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com