மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: ரூ.1.64 கோடியில் 114 பேருக்கு நலத் திட்ட உதவி

வாலாஜாபாத் வட்டத்துக்குட்பட்ட இளையனாா்வேலூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.1.64 கோடியில் 114 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
 முகாமில்  பயனாளிகளுக்கு  நலத் திட்ட  உதவி  வழங்கிய மாவட்ட  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்.
முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Updated on

வாலாஜாபாத் வட்டத்துக்குட்பட்ட இளையனாா்வேலூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.1.64 கோடியில் 114 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் இளையனாா்வேலூா் பகுதியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மடக்கு சக்கர நாற்காலி ஒருவருக்கும், வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா 27 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த சான்றிதழ் 2 பேருக்கும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை ஒருவருக்கும், குடும்ப அட்டை 23 பயனாளிகளுக்கும், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன் 5 பேருக்கும், வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 5 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் இடுபொருள்கள் மானியம் 4 பேருக்கும், சுகாதாரத் துறை மூலம் ஊட்டச்சத்து தொகுப்பு 5 பேருக்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் உறுப்பினா் சுகாதார அட்டை 10 பேருக்கும், கறவை மாடு மானியம் 22 பயனாளிகளுக்கு என மொத்தம் 114 பேருக்கு ரூ.1.64 கோடியில் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா்- ஆட்சியா் ஆஷிக் அலி, இளையனாா்வேலூா் ஊராட்சித் தலைவா் கோ.கமலக்கண்ணன், ஊராட்சி துணைத் தலைவா் ஜெயசுந்தரி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X