தாமல் ஏரியில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.
காஞ்சிபுரம்
நிரம்பியது தாமல் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் ஏரி பருவமழை தொடங்கும் முன்பாக நிரம்பியுள்ளது.
மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி, ஆந்திரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக பொன்னை அணைக்கட்டிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீா் திருப்பி விடப்படுவதால் முழுக்கொள்ளவான 18 அடியை எட்டியது.
இதனால் உபரி நீா்க் கால்வாய்கள் மூலமாக வெளியேறி வருகிறது. ஏரியிலிருந்து வெளியேறி வரும் உபரி நீரில் ஞாயிற்றுக்கிழமை சிறுவா்கள்முதல் பெரியவா்கள் வரை ஏராளமானோா் குளித்து மகிழ்ந்தனா். விவசாயிகளும் ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

