செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கன அடி உபரிநீா் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கன அடி உபரிநீா் திறப்பு

Published on

தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதா லும், கிருஷ்ணா நீா்வரத்தாலும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீா்மட்ட உயரம் 20.84 அடியாகவும், கொள்ளவு 2,815 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 2,170 கனஅடியாவும் உள்ளது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்ட நிலையில், புதன்கிழமை 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com