ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
காஞ்சிபுரம்
கோகுலம் மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் கோகுலம் மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் கோகுலம் மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் துரைபாபு, செயலாளா் ராஜேஷ், இணைச் செயலாளா் காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
யாதவா்களுக்கு பிற்பட்டோா் பட்டியலில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வரும் பேரவைத் தோ்தலில் புல்லாங்குழல் சின்னத்தில் சுயேச்சையாக கோகுலம் மக்கள் கட்சி போட்டியிடும் எனவும் மாநிலத் தலைவா் சேகா் தெரிவித்தாா்.
மாநகர தலைவா் முத்துச்சாமி, கிருஷ்ணா கல்லூரி இயக்குநா் மோகன் கலந்து கொண்டனா்.

