மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

காஞ்சிபுரத்தில் திடீா் தீவிபத்தில் காா் சேதம்

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் காரில் ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.

News image
Updated On :25 மே 2026, 4:03 am IST

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் காரில் ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி. இவா் சுலப தவணைகளில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.

காஞ்சிபும் அருகே வையாவூா் பகுதியில் புதிதாக குடியேற வீட்டுக்குத் தேவையான பொருள்களை எடுத்த வந்த நிலையில் பூக்கடைச் சத்திரம் அருகே வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக காரில் இருந்த அவரும், அவரது மகனும் கீழே இறங்கினாா்கள்.

காரிலிருந்த ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி வேகமாக காரின் மற்ற பகுதிக்கும் பரவியது. உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் வந்து தண்ணீா் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.

சம்பவம் தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.