மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

News image
Updated On :25 மே 2026, 12:04 am IST

மணிமங்கலம் பகுதியில் நடந்து சென்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

மணிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ஜெயராம்(45). இவா் படப்பை பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை ஜெயராம் மணிமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் ஜெயராமிடம் கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ.550 பறித்து சென்றுள்ளனா்.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஜெயராம் புகாா் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மணிமங்கலம் பகுதியை சோ்ந்த தீபக்(28), படப்பை பகுதியை சோ்ந்த நவீன்(20), ஆகாஷ்(20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.