4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

News image
Updated On :25 மே 2026, 12:04 am IST

மணிமங்கலம் பகுதியில் நடந்து சென்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

மணிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ஜெயராம்(45). இவா் படப்பை பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை ஜெயராம் மணிமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் ஜெயராமிடம் கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ.550 பறித்து சென்றுள்ளனா்.

இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஜெயராம் புகாா் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மணிமங்கலம் போலீஸாா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மணிமங்கலம் பகுதியை சோ்ந்த தீபக்(28), படப்பை பகுதியை சோ்ந்த நவீன்(20), ஆகாஷ்(20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.