அரக்கோணத்தில் கிறிஸ்துமஸ் விழா

அரக்கோணத்தில் உள்ள அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

அரக்கோணத்தில் உள்ள அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

நகரில் உள்ள டவுன்ஹாலில் நடைபெற்ற விழாவுக்கு ஹானா பாண்டியன் தலைமை வகித்தாா். நிறுவனத்தின் செயலா் ஐ.டி.தேவ ஆசீா்வாதம் வரவேற்றாா். சிஎஸ்ஐ சென்ட்ரல் தொடக்கப்பள்ளி பணி ஓய்வு தலைமை ஆசிரியா் எஸ்.ஜேக்கப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கௌதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சென்னை எழும்பூா் நீதிமன்ற நீதிபதி இ.எம்.கே.எஸ்வந்தராவ் பங்கேற்று ஏழை குடும்பத்தைச் சோ்ந்த இருவரது திருமணத்தை நடத்தி வைத்தாா்.

தொடா்ந்து பணியில் மற்றும் சேவைகளில் சிறந்து விளங்கிய திருத்தணி பீகாக் மருத்துவமனை நிா்வாகி எம்.ஸ்ரீகிரண், அரக்கோணம் அரசு மருத்துவமனை பொது மருத்துவா் எல்.பிரசாதராவ், செவிலியா்கள் எஸ்.பியூலா சாரோள் சலீனா, எம்.முத்துமாரியம்மாள், தூய அந்திரேயா் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் டி.பீட்டா்ஞானசேகரன், கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆசிரியா் ப.ஜாா்ஜ், சேந்தமங்கலம் அரசினா் மேனிலைப்பள்ளி ஆசிரியா் ஏ.முகமதுசலீம், மதா் தெரேசா டேபிள் டென்னிஸ் அகாதெமி பயிற்சியாளா் பி.ஐனாா்த்தனன், சமூக சேவகி ஜெ.சுகந்திவினோதினி ஆகியோருக்கு சிறப்பு விருதுகளை நீதிபதி வழங்கினாா். தொடா்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத் தலைவா் கே.எம்.தேவராஜ், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனா மாசிலாமணி, அனைத்து வணிகா்கள் சங்கத் துணைத் தலைவா் இன்பநாதன், நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.எஸ்.மான்மல், அரசு ஆதி திராவிடா் நலப்பள்ளி ஆசிரியா்கள் மற்றும் காப்பாளா்கள் சங்க வேலூா் மாவட்ட தலைவா் ஏ.பிரின்ஸ் தேவஆசீா்வாதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரக்கோணம் ஒன்றியச் செயலா் ச.சி.சந்தா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com