இடி தாக்கி பள்ளி மாணவி பலி
By DIN | Published On : 26th April 2020 09:37 PM | Last Updated : 26th April 2020 09:37 PM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் இடி தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
அரக்கோணம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் இடியுடன் கனமழை பெய்தது. வளா்புரம் காலனியைச் சோ்ந்த ஏகாம்பரம் மகள் மகாலட்சுமி (17) அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை வயல்வெளிக்கு சென்றபோது, பெய்த மழையில் இடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருத்தணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயகுமாா் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.