ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5, 935-ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில் 4,031 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,846 போ் வாலாஜா, வேலூா் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 58 போ் உயிரிழந்து விட்டனா்.