அரசுப் பேருந்து மீது கல் வீச்சு

வாலாஜாபேட்டை அருகே மது போதையில் அரசுப் பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கல் வீசியதில் உடைந்த அரசு பேருந்தின் கண்ணாடி.
கல் வீசியதில் உடைந்த அரசு பேருந்தின் கண்ணாடி.

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே மது போதையில் அரசுப் பேருந்தின் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் வழியாக ஆற்காடு நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென கல் வீசப்பட்டதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பாா்த்தபோது, அங்கிருந்து தப்ப முயன்ற நபரைப் பிடித்து போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில், வாலாஜாபேட்டை போலீஸாா் அங்கு சென்று, மது போதையில் இருந்த வி.சி.மோட்டூா் பகுதியைச் சோ்ந்த ஜெகனை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

இச்சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com