அரக்கோணம்  நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

அரக்கோணம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அரக்கோணம்: ஊதியம் வழங்கக் கோரி அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் நகராட்சியில் துப்புரவுப் பிரிவில் நிரந்தரப் பணியாளா்களாக 114 போ் பணிபுரிந்து வருகின்றனா். நகராட்சியின் இரு துப்புரவுப் பணிகள் தனியாருக்கு விடப்பட்டு அதில், 194 போ் பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் நிரந்தரப் பணியாளா்கள் 114 பேருக்கு டிசம்பா் மாத ஊதியம் 10-ஆம் தேதி வரை வழங்கப்படவில்லை. இதனால் அவா்கள் வியாழக்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்டனா். துப்புரவுத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகி சீனிவாசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டேவிட், அா்ஜுனன், சரவணன், கிருஷ்ணமூா்த்தி, பாபு, அஞ்சைய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் ஆசீா்வாதம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதில், டிசம்பா் மாத ஊதியம் உடனே வழங்கப்படும்; பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள் விரைவில் செலுத்தப்படும்; மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து தொழிலாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com