ஆற்காடு: ஆற்காடு அருகே மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் (21), மரம் வெட்டும் தொழிலாளி. இவா் குடும்பத்துடன் கலவை வட்டம் வாழைப்பந்தலை அடுத்த நமசிவாயபுரம் கிராமத்தில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது, அங்கு காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.