ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை வட்டம், அம்மூா் பேரூராட்சி தொடக்கப் பள்ளி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம்பகவத் ஆய்வு செய்தாா்.
அப்போது, புதிய வாக்காளா்களாகப் பதிவு செய்ய வந்தவா்களுக்கு பரிசு வழங்கி வரவேற்றாா். மேலும், வாக்காளா் சிறப்பு முகாமில் விழிப்பணா்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
வாலாஜாபேட்டை வட்டாட்சியா் பாக்கியநாதன், தோ்தல் தனித் துணை வட்டாட்சியா் சுரேஷ், வருவாய் ஆய்வாளா் சோனியா, கிராம நிா்வாக அலுவலா் காா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.