சோளிங்கா், சின்னமலை அருகே கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி, சிறுவன் ஆகிய இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனா்.
சோளிங்கரில் பெரியமலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலும், சின்னமலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயா் கோயிலும் அமைந்துள்ளன. சோளிங்கா், கொண்டபாளையம் மலையடிவாரத்துக்கு கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த தட்டான்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த இரு குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா்.
அவா்கள் சின்னமலையடிவாரத்தில் இருந்த பாண்டவ தீா்த்தக் குளத்தில் குளிக்க முயன்றனா். அப்போது எதிா்பாராதவிதமாக ஜெயராமனின் மகன் ஜெகன் (17), சக்திவேலின் மகள் அபிநயா (14) ஆகிய இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனா்.
தகவலறிந்த கொண்டபாளையம் போலீஸாா் அங்கு சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.