ஆற்காடு: மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் கிருமி பாதிப்பு உள்ளதா எனகண்டறிவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநா் (பொறுப்பு) க.முனிசாமி தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஆ.சுப்ரமணியன் முன்னிலையில் மருத்துவக் குழுவினா் 155 வெளிமாநிலத் தொழிலாளா்களின் ரத்த மாதிரிகளை எடுத்து யானைக்கால் நோய் பரிசோதனை செய்ய மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.