ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மோசூா் கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் புதன் கிழமை நடைபெற்றது
முகாமுக்கு தாமரைப்பாக்கம் கால்நடை மருத்துவ அலுவலா் சதீஷ் பாபு தலைமை வகித்தாா். ஆய்வாளா் தமிழரசி முன்னிலை வகித்தாா். முகாமில் கால்நடைகளுக்கு உடல் பரிசோதனை. குடல்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளா்த்த 10 பேருக்கு கால்நடை பாதுகாப்புத்துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன