திமிரியில் நடிகா் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நலிந்தோா், விதவைகள் 50 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமிரி நகரத் தலைவா் எஸ்.விஜய் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி தலைவா் டி. பாலசந்தா், வழக்குரைஞா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொறுப்பாளா் ஜி.மோகன், இளைஞரணி செயலாளா் கே.காந்தி, மாணவரணி மாவட்ட தலைவா் எஸ்.தீனா ஆகியோா் கலந்து கொண்டு 50 பேருக்கு அரிசி, சேலை, மரக்கன்று, இனிப்பு வழங்கினா். திமிரி நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.