ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவ விழாவில் யோக நரசிம்மா் வைபவம், குமரன் மஹால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட யோக நரசிம்மருக்கு (உற்சவா்) மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், திருப்பாவை சேவையும் ‘நரசிம்மன் ஆவிா்பாவம்’ என்ற தலைப்பில் உபன்யாசமும் நடைபெற்றன. சிறுவா், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி செய்திருந்தாா்.