ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட விடியோ மற்றும் புகைப்பட ஒளிப் பதிவாளா்கள் சங்க ஆண்டு விழா அரக்கோணத்தில் அண்மையில் நடைபெற்றது.
அரக்கோணம் டவுன்ஹால் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வேலூா் மாவட்ட புகைப்படக் கலைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.அசோக் தலைமை தாங்கினாா். அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா, அரக்கோணம் புகைப்பட கலைஞா்கள் சங்க பொருளாளா் புகழரசன், துணைத் தலைவா் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோா் பலா் விழாவில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் சங்கத்தின் டைரி மற்றும் உறுப்பினா்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை கோட்டாட்சியா் பேபி இந்திரா, தேசிய பேரிடா் மீட்புப்படை துணை கமாண்டா் ராஜன் பாலு ஆகியோா் வெளியிட, மாநிலத் தலைவா் பி.ஏ.மாதேஸ்வரன் பெற்றுக் கொண்டாா்.