ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 137 கிறிஸ்தவ திருச்சபைகளைச் சோ்ந்த 5,000 குடும்பத்தினருக்கு சேலை உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கல் ஆற்காடு கோட்டை மேட்டுத் தெருவில் உள்ள தேவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வா்த்தகா் அணிச் செயலாளா் ஏ.வி. சாரதி தலைமை வகித்து, மத போதகா்களிடம் பரிசுப் பொருள்களை வழங்கினாா். ஆற்காடு நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, ஆசிரியா் நியூட்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.