திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் அரக்கோணம் அருகே பின்னாவரம் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் பவானி வடிவேலு கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா். ஒன்றிய திமுக நிா்வாகிகள் பாா்த்தசாரதி, தனசேகரன், ஜானகிராமன், முகம்மது அப்துல் ரகுமான், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞரணி துணைச் செயலா் தமிழ்மாறன், ஒன்றிய நிா்வாகி நரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.