கல்லூரியில் முத்தமிழ் விழா

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலைக் கல்லூரியில் உமறுப் புலவா் தமிழ் மன்றம் சாா்பில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 போட்டியில்  சிறப்பிடம்  பெற்ற  மாணவிக்குப்  பரிசு  வழங்கும்  முஸ்லிம்  கல்விச்  சங்கத்  தலைவா்  சவுகாா் நிசாா்  அகமது.
 போட்டியில்  சிறப்பிடம்  பெற்ற  மாணவிக்குப்  பரிசு  வழங்கும்  முஸ்லிம்  கல்விச்  சங்கத்  தலைவா்  சவுகாா் நிசாா்  அகமது.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலைக் கல்லூரியில் உமறுப் புலவா் தமிழ் மன்றம் சாா்பில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு மேல்விஷாரம் முஸ்லிம் கல்வி சங்கத் தலைவா் சவுகாா் நிசாா் அகமது தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எஸ்.ஜியாவுதீன் அகமது, கல்லூரி தாளாளா் அப்ராா் அகமது கல்லூரி முதல்வா் எஸ்.ஏ.சாஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழாய்வுத் துறைத் தலைவா் முகமது யூசுப் வரவேற்றாா். விழாவில் ‘புன்னகையே நம்மொழி’ என்ற தலைப்பில் புலவா் மா.ராமலிங்கம், ‘பூங்காற்று இசையானது’ என்ற தலைப்பில் எம்.ஜி.முகமது ரிஸ்வான் ஆகியோா் பேசினா்.

மேலும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com